"சிவபுண்ணியமே கடவுளை எதிர்க்கலாமா?"
சென்னை:
தமிழகத்தில் அரை நாண் கயிறு கூட கட்ட முடியாத அளவுக்கு ஏழைகள் இருக்கும்போது திருப்பதிவெங்கடாசலபதிக்கு, காஞ்சி சங்கராச்சாரியார் ரூ.30 லட்சம் செலவில் தங்கப் பூணூ
சட்டசபையில், நேற்று (புதன்கிழமை) நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு சிவபுண்ணியம் பேசுகையில்,
நமது கிராமங்களில் ஆண்கள் இடுப்பில் அரை நாண் கயிறு அணிவது வழக்கம். ஆனால் அது கூட கட்டவழியில்லாமல் எத்தனையோ பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சி ஜெயேந்திர சுவாமிகள் ரூ.30 லட்சம் செலவில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு தங்கப் பூணூ
இதையடுத்து சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது எழுந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, தங்கப் பூணூ
மேலும், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு முன்பு ஒருவர் ரூ.90 லட்சம் செலவில் தங்க கிரீடம் தந்தார் என்பதைஉறுப்பினர் மறந்து விடக் கூடாது என்றும் ராமசாமி கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, சிவபுண்ணியம் என்று பெயர் வைத்துள்ள உறுப்பினர் எப்படிகடவுளுக்கு எதிராகப் பேசலாம் என்று கேட்கவே அவையே சிரிப்பில் ஆழ்ந்தது.
அப்போது எழுந்த உறுப்பினர் சந்தானம் (இவரும் பார்வர்ட் பிளாக்தான்), சிவபுண்ணியத்தின் பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த காளிமுத்து, ஆத்திகமும் நாத்திகமும் தங்களது கருத்துக்களை சமமாக இங்கு பமாறிக் கொண்டுவிட்டன. இதை இப்படியே விட்டு விடுவோம் என்று கூறி சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications