கெளடா முன்னிலையில் தொண்டர்கள் அடிதடி
சென்னை:
முன்னாள் பிரதமர் தேவ கெளடா தலைமையில் நடந்த மதச் சார்பற்ற ஜனதா தள பொதுக் குழுக் கூட்டத்தில் இருகோஷ்டிகளிடையே கைகலப்பு நடந்தது.
சென்னையில் மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. அப்போது இருகோஷ்டிகளிடையே தகராறு ஏற்பட்டது.
சரமாரியாக திட்டிக் கொண்ட அவர்கள், ஒரு கட்டத்தில் கெளடா முன்னிலையிலையே ஒருவரையொருவர்அடித்துக் கொண்டனர். இதனால் அதிர்ந்து போன கெளடா, உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுக்கக்கூறினார்.
போலீசார் விரைந்து வந்து தகராறு செய்தவர்களை விலக்கி விட்டு சமாதானப்படுத்தினர். அதன் பிறகு கூட்டம்தொடர்ந்து நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கெளடா பேசுகையில், இது சாதாரண தகராறுதான். கட்சிகளில் நிலவும்வழக்கமான பிரச்சினைதான். காமராஜர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசே கொண்டாட முடிவு செய்துள்ளதுமகிழ்ச்சியைத் தருகிறது, வரவேற்புக்குரியது என்றார்.












Click it and Unblock the Notifications