ஆந்திராவிலிருந்து 42 தமிழ் கொத்தடிமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
பெண்ணாகரம்:
ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த 21 குழந்தைகள் உள்பட 42 தமிழர்கள் மீட்கப்பட்டு, தர்மபுரிமாவட்டத்திலுள்ள அவர்கள் சொந்த ஊரான பெண்ணாகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குவாரியில் பல ஆண்டுகளாக அவர்கள் கொத்தடிமைகளாகஇருந்து வந்தனர்.
இவர்களை மீட்பதற்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
இதையடுத்து இந்த 42 பேரும் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்றின் மூலம் நேற்று (புதன்கிழமை) தர்மபுரிக்குக்கொண்டு வரப்பட்டனர்.
அவர்களை அன்புடன் வரவேற்ற தர்மபுரி மாவட்ட கலெக்டரான அபூர்வா, ஆளுக்கு ரூ.1,000 பணம் கொடுத்துஅவர்களை அவர்களுடைய சொந்த ஊரான பெண்ணாகரத்துக்கு அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications