15ம் தேதி ஆண்டிப்பட்டி செல்கிறார் ஜெ.
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 15ம் தேதி ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழகத்தின்முதல்வராக கடந்த மார்ச் 2ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில் பதவியேற்ற பிறகு முதன் முறையாக அவர் ஆண்டிப்பட்டிக்கு வரும் 15ம் தேதி செல்கிறார்.
தன்னை வெற்றி பெறச் செய்த ஆண்டிப்பட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அங்கு ரூ.98 கோடிசெலவிலான கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தெப்பம்பட்டி கண்மாய் அமைக்கும் பணிக்கு ஜெயலலிதா அடிக்கல்நாட்டுகிறார்.
பின்னர் தேனி சாலையில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் தற்காலிக மகளில் போலீஸ்நிலையத்தையும் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.
இவை தவிர பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் துவக்கி வைக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றபோது வேட்பாளராக ஜெயலலிதாவை வரவேற்றஆண்டிப்பட்டி மக்கள், தற்போது அவரை தமிழக முதல்வராக வரவேற்பு கொடுக்கவும் தயாராகி விட்டனர்.












Click it and Unblock the Notifications