மோடி நீக்கப்படுவாரா?- கோவாவில் கூடுகிறது பாஜக செயற்குழு
பனாஜி:
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கோவாவின் தலைநகரான பனாஜியில் இன்று (வெள்ளிக்கிழமை) பாஜகசெயற்குழுக் கூட்டம் கூடுகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகியதேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் போர்க்கொடி எழுப்பி வருகின்றன.
ஆனால் மோடியை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜகவின் தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தி நேற்றேதெளிவாகக் கூறிவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு ஹைதராபாத்தில் கூடிய தெலுங்கு தேசக் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக்கூட்டத்தில், மோடியை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
30 எம்.பிக்களைக் கொண்டிருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்தே ஆகவேண்டியசூழ்நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் பாஜகவின் செயற்குழுக் கூட்டம் இன்று பிற்பகல் பனாஜியில் நடைபெறவுள்ளது.மோடியை நீக்குவதா வேண்டாமா என்ற பிரச்சனைதான் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படஉள்ளது.
சிங்கப்பூர் மற்றும் கம்போடிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவுதான் டெல்லி திரும்பியவாஜ்பாய், இன்று நேரடியாக பனாஜி புறப்பட்டு வந்துள்ளார்.
குஜராத்தில் தற்போது முகாமிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லியும் மோடியை அழைத்துக் கொண்டுபனாஜிக்கு வந்து சேர்ந்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமையுமா என்பது குறித்தும் இன்றை செயற்குழுக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications