கடல் வளத்தை பெருக்க 45 நாட்கள் மீன் பிடிக்க தடை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

கடல் வளம் மற்றும் மீன் வளம் ஆகியவற்றைப் பெருக்குவதற்காக தமிழக கடற்கரைப் பகுதிகளில் வரும் 15ம் தேதிமுதல் மே 29ம் தேதி வரை மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடற்பகுதிகளில் ஏராளமான விசைப் படகு, நாட்டுப் படகு மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள்.

ஆண்டு முழுவதும் மீன் பிடிப்பதாலும் சுருக்குமடி, இரட்டை மடி மற்றும் கொல்லி மடி வைத்து மீன் பிடிப்பதாலும்,மீன் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு கடல் வளமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

இதனால் மீன்களின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் வரும் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை தமிழக கடற்பகுதிகளில் மீன் பிடிக்கக் கூடாது என்றுதமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மீன் வளத்துறை இயக்குநர்களுக்கும் மீனவ சங்கங்களுக்கும் இந்த உத்தரவுஅனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+