புலிகள் மீதான தடை நீங்காது: வாஜ்பாய் திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
புலிகள் மீதான தடையை நீக்க மாட்டோம் என பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதே நேரத்தில்ஆண்டன் பாலசிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் வாஜ்பாய்கூறினார்.
சிங்கப்பூர், கம்போடிய பயணத்தை முடித்துவிட்டு நேற்றிரவில் இந்தியா திரும்பிய அவர் டெல்லி விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு நார்வே நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகளில்இந்தியா தலையிடாது. அதே போல புலிகள் மீதான தடையை நீக்கும் திட்டமும் அரசிடம் இல்லை.
அதே நேரத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கவிடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு பரிசீலிக்கும் என்றார் வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications