இனி சினிமா பார்க்க முடியாது !!
சென்னை:
தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்கிறது. இந்தக் கட்டண உயர்வு நாளை முதல்அமலுக்கு வரும்.
இது தவிர புதிய படங்கள் ரிலீஸ் செய்யும்போது எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் எனவும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நாளை முதல் சினிமா டிக்கெட் கட்டணங்களை 75 சதவீதம் உயர்த்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
இதனால் இனி புதிய பார்க்கப் போக வேண்டுமானால் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்றநகரங்களில் குறைந்தபட்சம் 100 ரூபாய் கொண்டு போய் ஆக வேண்டும்.
இது குறித்து சட்டசபையில் ஜெயலலிதா கூறிதயாதவது:
கடைசி வகுப்பு டிக்கெட் தவிர வேறு எல்லா கட்டணங்களையும் உயர்த்திக் கொள்ள இந்த அனுமதி தரப்படுகிறது.
சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை நகரங்களில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ 10 வரை இருக்கலாம். மற்றநகரங்களில் இது ரூ. 5 வரை இருக்கலாம்.
தியேட்டர்களில் உள்ள மொத்த சீட்களில் கடைசி வகுப்புக்கு 20 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற வரைமுறைஇருந்தது. இதை 10 சதவீதமாக குறைத்துக் கொள்ள அனுமதி தரப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
புத்தாண்டுப் படங்கள் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்தக் கட்டண உயர்வு பொது மக்களை பெரிதும்பாதிக்கவுள்ளது.
தமிழர்களின் முக்கிய பொழுதுபோக்கே சினிமா தான். அதிலும் தமிழக அரசு புகுந்து விளையாடிவிட்டது.
இதனால் வீட்டில் உட்கார்ந்து டிவியில் அழுவாச்சி சீரியல்கள் பார்க்கும் ஜனங்களின் எண்ணிக்கை தான்அதிகமாகப் போகிறது.












Click it and Unblock the Notifications