டான்சி வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கோரிதிமுக மேலும் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
டான்சி வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையடுத்து, அவர்ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் தமிழக முதல்வரானார்.
இதற்கிடையே டான்சி வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுகவின் வழக்கறிஞரான ஆர்.எஸ். பாரதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த 22ம் தேதி டான்சி வழக்கு குறித்து விளக்கமளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை பாரதி தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் தமிழக முதல்வராக ஜெயலலிதா எப்படி முதல்வராகப்பதவியில் நீடிக்கலாம் என்று அம்மனுவில் கோரியுள்ள பாரதி, டான்சி வழக்கை விரைவில் விசாரிக்குமாறும்கேட்டுக் கொண்டுள்ளார்.
பாரதியின் இந்தப் புதிய மனு மீதான விசாரணை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications