கோட்டையில் வெடிகுண்டு?- புரளி கிளப்பியவர் கைது
சென்னை:
வேலை கிடைக்காத ஆத்திரத்தில் சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு போன் செய்து வெடிகுண்டுவைத்திருப்பதாக புரளி கிளப்பிய ராஜபாளையம் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு நேற்று (சனிக்கிழமை) காலை தொலைபேசி அழைப்பு ஒன்றுவந்தது.
அதில் பேசிய நபர், தனது பெயர் இமாம் அலி என்றும் கோட்டையில் (தலைமைச் செயலகத்தில்) குண்டுவைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் பறந்தது. இணை ஆணையர் சைலேந்திரபாபு தலைமையில் போலீஸார்விரைந்து வந்தனர். கோட்டையில் உள்ள அனைத்து வாசல்களும் மூடப்பட்டன. உள்ளே இருந்தவர்கள்வெளியேற்றப்பட்டனர்.
கோட்டை முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் அங்கு கிடைக்கவில்லை.இறுதியில் அந்த குண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள தொலைபேசி கட்டுப்பாட்டு அறையில் உள்ள கருவியில்வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைபேசி எண் பதிவாகியிருந்தது. இதை வைத்து கோட்டைக்கு அருகே உள்ளபகுதியில் இருந்துதான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். அங்கிருந்த ஒரு பூத்தில் விசாரித்தனர். போன் செய்தவரின்அடையாளம் அங்கு கிடைத்தது. இதை வைத்து ரிசர்வ் வங்கி பகுதியில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டார்.
அவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த பாபு என்றும், பட்டப்படிப்பு படித்துள்ள அவர் வேலை கிடைக்காத ஆத்திரத்தில்வெடிகுண்டு புரளியைக் கிளப்பியுள்ளார் என்றும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications