பிரபாகரனைப் பிடிக்க வேண்டும்: புதுவை சட்டசபையில் தீர்மானம்
பாண்டிச்சேரி:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டுவரும்தீர்மானம் பாண்டிச்சேரி சட்டசபையில் இன்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது.
ஆளும் காங்கிரஸ் அரசு இதுதொடர்பான தீர்மானத்தை இன்று கொண்டு வந்தபோது, அனைத்துக் கட்சிகளும்இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டன.
பாண்டிச்சேரியில் வழக்கமாக நடைபெறும் குரல் ஓட்டெடுப்பு மூலமே இந்தத் தீர்மானமும் நிறைவேறியது.
ஆனால் முக்கிய எதிர்க் கட்சியான திமுக மட்டும் இவ்விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாகக் கூறிவிட்டது. இதுதொடர்பான ஒரு அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஆர்.வி. ஜானகிராமன் சட்டசபையில் வாசித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரனைஇலங்கையிலிருந்து பிடித்துக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றுஅந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் அந்தத்தீர்மானம் வலியுறுத்தியது.












Click it and Unblock the Notifications