சென்னை தொலைபேசி அலுவலகக் கட்டடத்திலிருந்து குதித்து பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தொலைபேசி அலுவலகக் கட்டடத்தின் மேலிருந்து குதித்து ஒரு பெண் இன்று (திங்கள்கிழமை)காலை தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் பரபரப்பு மிகுந்த மவுண்ட் ரோடில் தொலைபேசி அலுவலகக் கட்டடம் உள்ளது.
ஏழு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தின் மொட்டை மாடியிலிருந்து இன்று காலை ஒரு பெண் திடீரென்றுகுதித்தார்.
குதித்த வேகத்திலேயே அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மக்கள் பதறிப்போய்,உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
பிங்க் நிற சேலை கட்டியிருந்த பெண் யார் என்றும், அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்றும்இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications