நாயுடுவுக்கு மம்தா, பாஸ்வான் ஆதரவு
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி எடுக்கும்முடிவை ஆதரிக்கப் போவதாக திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் முடிவுசெய்துள்ளன.
மோடியை நீக்கியே ஆக வேண்டும் என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு விடாப்பிடியாக இருந்துவந்தார். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பல கட்சிகளும் நாயுடுவுக்கு ஆதரவு தர மறுத்துவிட்டனர்.
இதையடுத்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இப்போதைக்கு வாபஸ் பெறப் போவதில்லை என்றுநாயுடு அறிவித்து விட்டார்.
ஆனாலும் இன்று (திங்கள்கிழமை) கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தின்போது இந்தப் பிரச்சனையை எழுப்பதெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கோரப் போவதாகவும்அக்கட்சியின் எம்.பிக்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே நாயுடு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கப் போவதாக திரிணாமூல் காங்கிரஸ்தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
அதேபோல் லோக்ஜன சக்தியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானும் நாயுடுவுக்குப் பின்னால் நிற்கப் போவதாகக்கூறியுள்ளார்.
இந்த இரண்டு கட்சிகளும் நேற்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications