புலிகளுக்கு எதிரான தீர்மானம்: ஜெ.வுக்கு பொன்னாடை போர்த்திய காங். எம்.எல்.ஏக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாராட்டுதெரிவித்து அவருக்கு பொன்னாடை போர்த்தினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரபாகரனை பிடித்துக் கொண்டு வருவது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை நேற்று (புதன்கிழமை) சந்தித்துஇதற்காகத் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
மேலும் ஜெயலலிதாவுக்கு அவர்கள் பொன்னாடையும் அணிவித்து தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications