இடைத் தேர்தல் : ஏப்ரல் 22ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை:
மே 31-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று சட்டசபைத் தொகுதிகளின் இறுதிவாக்காளர் பட்டியல் வரும் 22ம் தேதி வெளியிடப்படுகிறது.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போலி வாக்காளர்பட்டியல் சேர்க்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
சமீபத்தில் அச்சிறுப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான செல்வராஜ் இறந்ததையடுத்து, அந்தத் தொகுதியும் காலியானது.
இதற்கிடையே சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்பட்டு, வாக்காளர்கள் பார்வைக்குமாதிரி வாக்காளர் பட்டியலும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 22ம் தேதி இந்த மூன்று தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்களைத் தமிழகத் தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது.












Click it and Unblock the Notifications