புலிகள் விஷயத்தில் திமுக நடுநிலை ஏன்? - கருணாநிதி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு நடுநிலை வகிப்பதாக திமுக கூறியுள்ளதற்குஅக்கட்சியின் தலைவரான கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ. நெடுமாறன் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தத் தீர்மானம்தமிழர்களுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், நடுநிலை என்ற பெயரில் திமுக நழுவியிருப்பதுவரலாற்றில் படிந்து விட்ட கறையாகும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு விளக்கமளித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 1987ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை அனுப்பப்பட்டது வரலாற்றில் ஒருபெரிய கறையாகும்.

அதேபோல் கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைசெய்யப்பட்டதும் அழிக்க முடியாத ஒரு பெரிய கறைதான்.

இந்த இரண்டு கறைகளையும் கவனத்தில் கொண்டே நாங்கள் சட்டசபையில் நடுநிலையுடன் நடந்து கொண்டோம்என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+