ஆசிரியர் கற்பழித்ததில் 7ம் வகுப்பு மாணவி கர்ப்பம்

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் 14 வயதான ஒரு சிறுமி கற்படைந்துள்ளார். அவளைக் கற்பமாக்கியவன் அவரது 45 வயதுபள்ளி ஆசிரியர். அவர் இப்போது தலைமறைவாகிவிட்டார்.

வேதாரண்யம் அருகே உள்ள குரவப்புலம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகள் விஜிலா (14). ஒருதனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறாள்.

கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி வகுப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் விஜிலா. அப்போது அந்தஅறையில் வேறு மாணவர்கள் யாரும் இல்லை. அப்போது பள்ளி அறைக்கு வந்த அந்த ஆசிரியர் ராஜரத்தினம்என்பவவர் அதையே பள்ளியறை ஆக்கினார்.

அந்த வகுப்பறையின் கதவையும் ஜன்னலையும் மூடிவிட்டு அங்கேயே வைத்து விஜிலாவை கற்பழித்தார்ராஜரத்தினம். இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் விஜிலாவை ராஜரத்தினம்மிரட்டியுள்ளார்.

இதையடுத்து இதை வெளியில் சொல்லாமல் இருந்துவிட்டாள் விஜிலா. ஆனால், அவள் கர்ப்பமடைந்தாள்.இதையடுத்து வீட்டில் விசாரித்ததில் விவரத்தைக் கூறியிருக்கிறாள். அவளது அண்ணன் ரவி உடனேராஜரத்தினத்தைச் சந்தித்து நியாயம் கேட்டுள்ளாார்.

ஆனால், வயிற்றில் வளர்ந்து வரும் கருவைக் கலைத்து விடுமாறு கூறி அதற்கு ரவியிடம் பணத்தையும்கொடுத்துள்ளார் ராஜரத்தினம்.

இதை ஏற்காத விஜிலாவின் குடும்பத்தினர் இந்தப் பிரச்சனையையை கிராமப் பஞ்சாயத்துக்குக் கொண்டு சென்றனர்.ஆனால், பஞ்சாயத்திலும் ஆசிரியர் ராஜரத்தினம் பிடிகொடுக்காமல் பேசினார். பலமுறை பேசியும் பலன்கிடைக்காததால் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் விஜிலா புகார் செய்தார்.

ஆனால் அதற்குள் ராஜரத்தினம் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+