ரயில்வே காவலரால் உயிர் பிழைத்த பயணிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ரயில்வே பாதுகாப்பு வீரன் சமயோஜிதத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை - பொன்னேரி ரயில் பாதையில், கந்தசாமி என்ற ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் காலையில் பணியில் இருந்தார். அப்போதுரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததைப் பார்த்து விட்டார் கந்தசாமி.
அப்போது பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து உடனடியாக ரயிலை நிறுத்தச் சொல்லி சைகை காட்டினார். காவர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று ரயிலை நிறுத்தச் சொல்வதைப் பார்த்த ரயிலின் டிரைவர் அவசர பிரேக்குகளை இயக்கி ரயிலை நிறுத்தினார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கந்தசாமியை டிரைவர் மற்றும் பயணிகள் பலரும் இறங்கி வந்து பாராட்டினர்.












Click it and Unblock the Notifications