ஊழலுக்காக ஆட்சியை இழந்தது திமுக: அமைச்சரின் பேச்சால் சட்டசபையில் கலாட்டா
சென்னை:
கடந்த காலங்களில் ஊழலுக்காகவே இருமுறை தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்தது என்று வருவாய்த்துறைஅமைச்சர் தளவாய் சுந்தரம் இன்று சட்டசபையில் கூறியதையடுத்து திமுக உறுப்பினர்களுக்கும்அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
சுமார் பத்து நிமிடங்களுக்கு சபையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
சட்டசபையில் இன்று பேசிய தளவாய் சுந்தரம், ஊழல் என்ற மிகப் பெரிய "விருதை" மட்டுமே மத்தியஅரசிடமிருந்து திமுக அரசு பெற்றுள்ளது என்று கூறினார்.
தளவாயின் இந்தப் பேச்சைக் கேட்டு ஆளும் அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் மேஜையைத்தட்டிப் பாராட்டினர்.
இதனால் கடுப்பாகிப் போன சட்டசபை திமுகவின் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன்,தேவையில்லாத-உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காகவே பல மாநில அரசுகளை மத்திய அரசு பலமுறைகலைத்துள்ளது என்று பதிலுக்குக் கூறினார்.
ஆனால் தளவாய் சுந்தரம் சளைக்காமல், ""இதை நான் சொல்லவில்லை. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒருஅறிக்கையில்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது"" என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்.
இதைக் கடுமையாக ஆட்சேபித்து திமுகவினர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ஸ்டாம்ப் டியூட்டி கட்டுவதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு தனியார் டிவி நிறுவனம் தன்னுடையசொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏவான போளூர் வரதன் குற்றம் சாட்டினார்.
இதனால் மீண்டும் கடுப்பான துரைமுருகன், சபாநாயகர் காளிமுத்துவைப் பார்த்து, ""இது தொடர்பாக ஏதாவதுஆவணங்களை உங்களிடம் போளூர் வரதன் காண்பித்தாரா? அவரை எப்படி நீங்கள் இவ்வாறு பேசஅனுமதிக்கலாம்?"" என்று கோபத்துடன் கேட்டார்.
அப்போது மீண்டும் அவையில் ஐந்து நிமிடங்களுக்கு அமளி ஏற்பட்டது. ஆதாரமில்லாத விஷயங்களை அவையில்சமர்ப்பிக்காமல் பேசக்கூடாது என்று போளூர் வரதனை காளிமுத்து கண்டித்த பிறகே துரைமுருகன்அமைதியானார்.












Click it and Unblock the Notifications