For Daily Alerts
Just In
திருமணமாகாத பெண்களுக்கு பென்ஷன்
புதுச்சேரி:
40 வயதாகியும் திருமணமாகமல் இருக்கும் பெண்களுக்கு சிறப்பு பென்ஷன் வழங்குவது பற்றி பாண்டிச்சேரி அரசு பரிசீலித்துவருகிறது.
இத் தகவலை அமைச்சர் மு.சந்திரகாசு புதுவை சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
இந்த சலுகை இருபாலருக்கும் பொருந்துமா என்று பேரவைத் தலைவர் கேள்வி எழுப்பியதற்கு, பெண்களில் தான் திருமணம்ஆகாதவர் உண்டு; ஆண்களில் அவ்வளவாக இருப்பதில்லை; எனவே இது பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சர்பதிலளித்தார்.
வரதட்சணை தர இயலாமல் ஆயிரக்கணக்கான பெண்கள் திருமண வயதைத் தாண்டியும் கூட மணமாகாமல் இருப்பதாகவும்அவர்களுக்கு உதவும் நோக்கில் தான் இத் திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் புதுவை அரசு தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Friday, April 19, 2002, 5:30 [IST]