மாணவியைக் கற்பழித்த 3 பி.எஸ்.எப். வீரர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
பகல்காம்:
காஷ்மீரில் உள்ள பகல்காமில் 17 வயதுப் பெண்ணைக் கற்பழித்த 3 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பகல்காமைச் சேர்ந்த அந்த மாணவியை மூன்று எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் கற்பழித்து விட்டுஓடிவிட்டனர்.
அந்தப் பெண் போலீசாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்ததையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று எல்லைப் பாதுகாப்புப்படையினரையும் கண்டுபிடிப்பதற்காக அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதில் அந்த மூவரையும் கண்டுபிடித்து அந்தப் பெண் கூறியதையடுத்து, அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பாதுகாப்புப் படையினருக்கு எதிராக அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம்நடத்தினர்.












Click it and Unblock the Notifications