குழப்பங்களின் ஒட்டுமொத்த உருவம்தான் ஜெ.: இளங்கோவன்
திருச்சி:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமீபத்திய பேச்சுக்களை வைத்துப் பார்க்கும்போது அவர் குழப்பத்தின் மொத்தஉருவமாகவே உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று கூறினார்.
திருச்சியில் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
பல்வேறு விஷயங்களில் ஜெயலலிதா முன்னுக்குப் பின் முரணாகவே பேசி வருகிறார். முதல் நாள் ஒருவிஷயத்தைக் கூறிவிட்டு மறுநாளே அதற்காக வருத்தம் தெரிவிக்கிறார். அல்லது அப்படிப் பேசவே இல்லை என்றுகூறுகிறார்.
இப்படி தினமும் மாறி மாறிப் பேசி குழப்பத்தின் மொத்த உருவமாகவே ஜெயலலிதா காணப்படுகிறார்.
இப்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சிஅதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறுவது அதிமுகவின் வழக்கமான நடைமுறைதான். அதை நாங்களும் எதிர்பார்த்தோம்.இதைவிட மோசமான செயல்களிலும் அவர்கள் ஈடுபடுவார்கள் என்றார் இளங்கோவன்.