கரூர் அருகே 12 கொத்தடிமைகள் மீட்பு
கரூர்:
கரூர் அருகே கல் குவாரி ஒன்றில் கொத்தடிமைகளாக இருந்த 12 பேர் மீட்கப்பட்டனர்.
கரூர் அருகே உள்ளது வேட்டைக்காரன்பட்டி கிராமம். இங்குள்ள கல் குவாரி ஒன்றில் கொத்தடிமைகள் இருப்பதாகமாவட்ட கலெக்டர் அண்ணாமலைக்குத் தகவல் வந்தது.
உடனடியாக சம்பந்தப்பட்ட கல் குவாரி நிறுவனத்தில் சோதனை நடத்தி கொத்தடிமைகள் யாரும் இருக்கிறார்களாஎன்று அறியமாறு கரூர் ஆர்.டி.ஓவான ரவி, தாசில்தார் துரைராஜ் ஆகியோருக்கு உத்தரவிட்டார் ஆட்சியர்.
இதையடுத்து அதிகாரிகள் ரவியும், துரைராஜுவும திடீர் சோதனை நடத்தினர். அப்போது 12 பேர்கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு, வேலை வாங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
உடனே அந்த 12 பேரும் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரை, திண்டுக்கல், போடி, மேலூர், வேடசந்தூர்ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவரையும் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.