வாடிய பூச்செடிகளால் வாடிய வாலிபர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநின்றவூர்:
சென்னையில் கடும் வெயிலுக்கு தான் வளர்த்த பூச்செடிகள் வாடி வதங்கிப் போனதால் மனமுடைந்த வாலிபர்தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநன்றவூரைச் சேர்ந்தவர் தரணீதரன். இவர் பூச்செடிகள் வளர்த்து அதைவிற்பனை செய்து பிழைத்து வந்தார்.
தற்போது கடுமையான கோடை காலமாக இருப்பதால் அடிக்கும் வெயிலுக்கு பூச்செடிகள் வளர்வதற்குப் பதில்காய்ந்து கருவாடாகி விட்டன.
பூச்செடிகளை விற்றுத்தான் வயிற்றைக் கழுவும் நிலையில் தரணீதரன் இருந்து வந்தார். ஆனால் பூச்செடிகள்எல்லாம் வாடி விட்டதால் அவரது வயிற்றில் மண் விழுந்தது.
இதனால் வெறுப்படைந்த தரணீதரன், விஷம் குடித்துத் தற்கொலைசெய்து கொண்டார்.
இந்த பரிதாப சாவு குறித்து திருநன்றவூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications