For Daily Alerts
Just In
மார்க்சிஸ்ட் தொண்டர் கொலை வழக்கில் 4 பேர் கைது
சென்னை:
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதீப்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம்தொடர்பாக 4 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டரான பிரதீப்குமார் கடந்த வாரம் அடையாளம் தெரியாத மர்மக் கும்பலால் இரவுநேரம் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கொலையாளிகளைத் தேடி வந்த போலீசார், இன்று காலை நான்கு பேரைக் கைதுசெய்தனர்.
பிரதீப்பைக் கொலை செய்வதற்காக அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட நான்கு கொலையாளிகளும் இன்று மாலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
Story first published: Tuesday, April 23, 2002, 5:30 [IST]