சாதனைக் காவலருக்கு ரூ.50,000 பரிசளித்தார் ஜெ.
சென்னை:
பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகனுக்கு முதல்வர்ஜெயலலிதா ரூ.50,000 பரிசி வழங்கிப் பாராட்டினார்.
தேனி மாவட்டம் அழகுசெட்டிப் பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கோவை ஊரக மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார்.
சாதனை படைப்பதில் தீராத ஆர்வம் கொண்ட அவர், இதுவரை எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார்.சமீபத்தில் 30 அடி உயரத்தில் இருந்து மார்பகப் பகுதி தண்ணீரில் படும்படியாக படுக்கை வசத்தில் குதித்து உலகசாதனை படைத்தார்.
அவரது சாதனைகளைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, வேல்முருகனை கோட்டைக்கு வரவழைத்து அவரைப்பாராட்டி ரூ.50,000 பரிசுத் தொகையை வழங்கினார். தமிழக காவல்துறை சார்பில் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
ஜெயலலிாதவுக்கு நன்றி தெரிவித்து பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்ட வேல்முருகன், அடுத்துஹெலிகாப்டரில் இருந்து நடுக் கடலில் குதித்து சாதனை செய்யப் போவதாக தெரிவித்தார். அதற்கு ஜெயலலிதாதன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதற்கான செலவுகளை தமிழக காவல்துறையே ஏற்றுக் கொள்ளும்என்றும் தெரிவித்தார்.
வேல்முருகனுடன் அவரது பெற்றோரும் வந்திருந்தனர். வேல்முருகனின் தாயார், ஜெயலலிதாவின் நாடியைப்பிடித்து வாழ்த்தி நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications