சென்னை: வைகை எக்ஸ்பிரசில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுடன் ஒரு இளைஞர்ஏறியுள்ளதாக வந்த போன் தகவலையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை-எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தினமும் பகல் 12.45 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பிமதுரை செல்லும்.
இன்றும் அந்த ரயில் வழக்கம் போலவே கிளம்புவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தபோது, அந்த ரயிலில்வெடிகுண்டுகளுடன் ஒரு இளைஞர் ஏறியுள்ளதாக எழும்பூர் ரயில்வே அதிகாரிக்கு ஒரு போன் வந்தது.
மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சித்திரைத் திருவிழாவைச் சீர்குலைப்பதற்காகவே அந்த இளைஞர்புறப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் போனில் பேசிய நபர் கூறினார்.
இதையடுத்து இந்தத் தகவல் போலீசாருக்குப் பறந்தது. வெடிகுண்டு நிபுணர்களுடன் மின்னல் வேகத்தில் எழும்பூர்ரயில் நிலையத்திற்கு வந்த போலீசார், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதும் சோதனை செய்தனர்.
ஆனால் எந்த இளைஞரும் வெடிகுண்டுகளுடன் சிக்கவில்லை. இதையடுத்து, அந்த போன் மிரட்டல் வெறும் புரளிஎன்பது தெரிய வந்தது. இதையடுத்து ரயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றது.
ரயில் நிலையத்துக்குப் போன் செய்து மிரட்டிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications