பா.ம.க.விழாவுக்கு தடை கோருகிறார் திருமாவளவன்
சென்னை:
இளைஞர் விழா என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சியினால் சமூகஒற்றுமை கெடுகிறது. எனவே அதற்குதி தடை விதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர்திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சித்ரா பெளர்ணமியன்று ஆண்டுதோறும் இளைஞர் விழாவை பாட்டாளி மக்கள் கட்சி கொண்டாடி வருகிறது.நேற்று இரவும் இந்த விழா கொண்டாடப்பட்டது.
அப்போது மரக்காணம் அருகே தலித்கள் நிறைந்த பகுதியில் வேன்களில் வந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் சில பெண்களைகேலி செய்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து அந்த வேன்கள் மீது தாக்குல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.
இந் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சித்திரைத் திருவிழா கொண்டாட தடை விதிக்க வேண்டும் என்று தலித் கட்சியானவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சித்திரைத் திருவிழா என்ற பெயரில் வன்முறைத் திருவிழாவை பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இது ஜாதிதுவேஷத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. சமூக ஒற்றுமையைக் குலைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்று அவர் கோக்கை விடுத்துள்ளார்.