For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட்டித் தீவுகளில் நுழைய புலிகளுக்கு கடற்படை தடை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

யாழ்பாணத்தை ஒட்டியுள்ள சிறிய தீவுகளில் அரசியல் பணிகளை மேற்கொள்ள விடுதலைப் புலிகளுக்கு அனுமதிதர முடியாது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இது குறித்து நார்வே அமைப்பு அமைத்துள்ள போர் நிறுத்த கண்காணிப்பு அலுவலகத்துக்கு கடற்படையின் ரியர்அட்மிரல் வீரசிங்கே எழுதியுள்ள கடிதத்தில்,

இந்தத் தீவுகள் ராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ள பாதுகாப்புப் பகுதிகளாகும். ஒருவரின் பாதுகாப்புப் பகுதிகளில்இன்னொரு தரப்பினரை அனுமதிக்க வேண்டியதில்லை என்று போர் நிறுத்த ஒப்பந்திலேயே கூறப்பட்டுள்ளது.

ஊடுருவலைத் தடுக்க இந்தத் தீவுகளைச் சுற்றி கடற்படை தற்காப்பு மையங்களை அமைத்துள்ளது. இந்த முழுபகுதியுமே ராணுவ பகுதிகளாகும். அதனால் தான் புலிகளுக்கு அனுமதி தர மறுக்கிறோம்.

அதே நேரத்தில் இந்தத் தீவுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களை சந்திக்கவோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ளவும் புலிகள் தாராளமாக வந்து செல்லலாம்.

ஆனால், அவர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, போர் உடை அணிந்திருக்கக் கூடாது, சயனைட் குப்பிவைத்திருக்கக் கூடாது, வயர்லெஸ் அல்லது கேமராக்களையும் கொண்டு வரக் கூடாது என்று அக் கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்குப் பகுதிகளில் ஆயுதம் இல்லாத புலிகள் சிறு குழுவாக வந்து செல்லஅனுமதி தரப்பட்டுள்ளது. இநதப் பகுதிகளில் அலுவலகங்களைத் திறக்கவும் புலிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், யாழ்பாணத்தை ஒட்டியுள்ள சிறிய தீவுகளுக்குள் நுழைய புலிகளை ராணுவம் கடந்த 2 வாரங்களாகமறுத்து வருகிறது. இதற்குக் காரணம் இந்தத் தீவுகளில் கடற்படையின் தளங்களும் முகாம்களும்அமைக்கப்பட்டுள்ளது தான்.

இந்தத் தீவுகளில் புலிகளுக்கு எதிரான ஈழ மக்கள் விடுதலை முன்னணியினரை இலங்கை ராணுவம் அனுமதித்துவந்தது. இதனால் இத் தீவுகள் கிட்டத்தட்ட இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வந்தன. இவர்கள்ஆயுதங்களுடன் திரிய அரசு அனுமதி தந்திருந்தது. கடந்த மாதம் தான் இவர்கள் ஆயுதங்களை அரசிடம்ஒப்படைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X