இடைத் தேர்தல்: சுவாமியின் "சூப்பர்" முடிவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழக சட்டசபை இடைத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடுவதில்லை என்று சுப்ரமணிய சுவாமியின்தமிழக ஜனதாக் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில்,
மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை என்று எங்களது கட்சி முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்தலைநாங்கள் புறக்கணிக்கிறோம்.
பிரபாகரனுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததன் மூலம் தன்னை சிறந்த அரசியல்வாதி என்றுமுதல்வர் ஜெயலலிதா நிரூபித்து விட்டார். அதனால் இந்த இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தாலும்ஆதரிப்போம்.
பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியை இழக்கும். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல்நடைபெறும்.
வாஜ்பாய் மாறி விட்டார். அவரது கொள்கைகளும் தடம் புரண்டு போய் விட்டன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications