For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் பொய் சொல்வதாக கராத்தே புகார்

Google Oneindia Tamil News

சென்னை:

பிரேசில் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு போகவிருப்பதாக சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் கூறுவது சுத்தப்பொய். தனியார் அழைப்பின் பேரில்தான் அவர் அங்கு செல்கிறார் என்று அதிமுகவைச் சேர்ந்த துணை மேயர் கராத்தேதியாகராஜன் கூறியுள்ளார்.

ஸ்டாலினுக்கும், கராத்தே தியாகராஜனுக்கும் இடையிலான சண்டைகள் தமிழகம் அறிந்தது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்ஸ்டாலினை வாரி விடுவதே கராத்தேவுக்கு முக்கிய வேலை. இந் நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின்பேசுகையில், தான் பிரேசில் போகப் போவதாகவும், அந்நாட்டு அரசின் அழைப்பின் பேரில் மேயர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறினார்.

இதை கராத்தே தியாகராஜன் ஏற்கனவே விமர்சித்திருந்தார். இந்த நிலையில் ஸ்டாலின் அந் நாட்டு அரசு அழைப்பின் பேரில்செல்லவில்லை என்று கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பிரேசில் அரசு அழைப்பின் பேரில் அங்கு செல்வதாக ஸ்டாலின் கூறுவது சுத்தப் பொய். அப்படி எந்த அழைப்பும் ஸ்டாலினுக்குஅனுப்பப்படவில்லை. ஜார்ஜ் மேத்யூ என்பவர்தான் இந்த அழைப்பை அனுப்பியுள்ளார்.

ஜார்ஜ் மேத்யூவின் பரிந்துரையின் பேரில், சர்வதேச கூட்டமைப்பு என்ற தனியார் அமைப்பு ஸ்டாலினுக்கு அழைப்புஅனுப்பியுள்ளது.

சென்னை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஸ்டாலினுக்கு ஆர்வம் இல்லை, தீவிபத்து ஏற்பட்டால் அங்கு சென்று குடிசைமக்களின் குறைகளைக் கேட்க அவருக்கு நேரமில்லை, ஆனால் ஏதோ ஒரு அமைப்பின் அழைப்பை ஏற்று பிரேசில் செல்லப்போகிறாராம்.

ஜார்ஜ் மாத்யூ யார் என்பது குறித்தும், பிரேசில் செல்வதற்கு கோர்ட்டின் முன் அனுமதியை (ஸ்டாலின் மீது மேம்பால ஊழல்வழக்கு இருப்பதால்) ஸ்டாலின் வாங்கியுள்ளாரா என்பது குறித்தும் தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்று கூறினார் கராத்தேதியாகராஜன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X