அதிரடிப் படையினரின் கொடுமைகள்: விரைவில் அறிக்கை தாக்கல்
சென்னை:
வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படை போலீசார் செய்த கொடுமைகள் குறித்து விசாரித்துவரும் நீதிபதி சதாசிவா கமிஷன், தான் இடைக்கால அறிக்கை எதையும் தாக்கல் செய்யப் போவதில்லை என்றுதெரிவித்துள்ளது.
அதிரடிப்படை போலீசாரால் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்க நீதிபதி சதாசிவா தலைமையில் கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனில் முன்னாள் சிபிஐ இயக்குநர் நரசிம்மனும் இடம் பெற்றிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சதாசிவா கமிஷன் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது.அப்போது ஏராளமானோர் ஆஜராகி போலீசார் தங்களுக்கு இழைத்த கொடுமைகள் குறித்து விவரித்தனர்.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் நீதிபதி சதாசிவா பேசுகையில்,
இதுவரை மாதேஸ்வரன் மலை, கோபி, கொளத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300 பேர் வாக்குமூலம்அளித்துள்ளனர். இறுதிக் கட்ட விசாரணை பெங்களூரில் நடைபெறும். அப்போது போலீசார் தங்களது தரப்புநியாயத்தை எடுத்து வைப்பர்.
கமிஷன் விசாரணை முடிந்த பின் தான் அறிக்கை தாக்கல் செய்யப்படும், அதுவும் தேசிய மனித உரிமைகமிஷனிடம் தான் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும் எண்ணம் இல்லை என்றார் நீதிபதி சதாசிவா.