அதிரடிப்படை அட்டூழியம்: தேவாரத்தையும் விசாரிக்க சதாசிவம் கமிஷன் முடிவு
கோபி:
வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக, கர்நாடக அதிரடிப்படை வீரர்கள், கிராம மக்களுக்கு இழைத்தகொடுமைகள் குறித்து விசாரித்து வரும் நீதிபதி சதாசிவம், அதிரடிப்படை தலைவரான வால்டர் தேவாரத்தையும்விசாரிக்கப் போவதாகக் கூறினார்.
கடந்த சில நாட்களாக கோபி பகுதியில் முகாமிட்டு பல்வேறு பழங்குடியினர் மற்றும் கிராமத்தினரிடம் நீதிபதிசதாசிவம் மற்றும் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி நரசிம்மன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் சதாசிவாநிருவர்களிடம் கூறுகையில்,
வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெங்களூரில் இறுதிக்கட்ட விசாரணை நடக்கிறது.
அப்போது தேவாரத்தையும் நாங்கள் விசாரிப்போம். அவர் மீதும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன என்றார் அவர்.
தேவாரம் தவிர கர்நாடக அதிரடிப்படையின் தலைவராக இருந்த சங்கர் பித்ரி ஆகியோர் மீதும் அப்போதுஏராளமான புகார்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.