ஜெயாவை சந்திக்கிறார் மதுரை திமுக மேயர்
சென்னை:
மதுரை மாநகராட்சி மேயர் செ. ராமச்சந்திரன் வரும் 14ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து மதுரை மாநகரவளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசுகிறார்.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பிறகு, அவரை திமுக தரப்பிலிருந்து உயர் பதவி வகிக்கும் ஒருவர்இப்போதுதான் சந்தித்துப் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவை சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சென்று சந்திக்கவில்லை என்றுஏற்கனவேஜெயலலிதாவும், அதிமுகவினரும் குறை கூறியுள்ளனர்.
ஆனால், தான் சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியதாகவும், முதல்வர் தரப்பிலிருந்துதான் இன்னும் அனுமதிகிடைக்கவில்லை என்றும் ஸ்டாலின் கூறி வருகிறார்.
இதற்கிடையே ஸ்டாலின் எம்.எல்.ஏவாகவும் இருப்பதால், அவருடைய மேயர் பதவியைக் காலி செய்யும் "ஒருநபர், ஒரு பதவி" என்ற சட்ட மசோதாவை தமிழக அரசு சமீபத்தில்தான் தாக்கல் செய்தது.
இந்நிலையில் மதுரை மேயர் ராமச்சந்திரன் கடந்த மாதம் 23ம் தேதி தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். மதுரைமாநகர வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், அதற்குரிய நிதியை விரைவாக ஒதுக்க வேண்டும் என்றும், இதற்காகமுதல்வரைச் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டு என்றும் அவர் அக்கடிதத்தில் கோரியிருந்தார்.
இந்தக் கடிதம் பரிசீலிக்கப்பட்டு, மதுரை மேயர் தலைமையிலான குழு வரும் 14ம் தேதி ஜெயலலிதாவை தலைமைச்செயலகத்தில் காலை 7 மணிக்கு சந்திக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராமச்சந்திரன் தலைமையில், துணை மேயர், மாநகராட்சி அனைத்துக் கட்சித் தலைவர்கள், மண்டலதலைவர்கள், மதுரையிலுள்ள 6 எம்.எல்.ஏக்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள 2 எம்.பிக்கள் ஆகியோர்அடங்கிய குழு வரும் 14ம் தேதி ஜெயலலிதாவைச் சந்திக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications