இடைத் தேர்தல்: 5ம் தேதி மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும்மதிமுக வேட்பாளர்கள் 5ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி இரு தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் 4ம் தேதி மாலைக்குள் ரூ.2,000 கட்டி விண்ணப்பிக்க வேண்டும்.
5ம் தேதி ஆட்சிமன்றக் குழு கூடி விவாதித்து வேட்பாளர்களை இறுதி செய்யும் என்று அந்தச் செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் பாமகவை ஆதரிக்கப் போவதாகக் கூறியுள்ள மதிமுக, மற்ற இரண்டுதொகுதிகளிலும் பாஜக போட்டியிட விரும்பினால் அது குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 4ம் தேதிதான் பாஜக தன்னுடைய முடிவை அறிவிக்கப்போவதாகக் கூறியுள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications