மிசா பாண்டியன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
அதிமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன்,ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த புஷ்பராஜ் என்ற அதிமுக பிரமுகர் ஒருவரை மிசா பாண்டியன் தாக்கியதாக போலீஸில் புகார்கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர்.
தன்னை ஜாமீனில் விடக் கோரி மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மிசா பாண்டியன் மனு செய்தார். ஆனால்அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மிசா பாண்டியன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாத்தநீதிபதி, மிசா பாண்டியனை ஜாமீனில் விடுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து மிசா. பாண்டியன் ஜாமீனில்விடுவிக்கப்பட்டார்.
சமீபத்தில்தான் ஒரு கொலை வழக்கிலிருந்து விடுதலையானார் மிசா பாண்டியன். அதற்கு முன்பாகவே அவர்திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து, மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானார்.