For Daily Alerts
Just In
தஞ்சை அருகே மின்சாரம் பாய்ந்து 4 பக்தர்கள் பலி
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் தூக்கி எறியப்பட்டு இறந்தனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள அம்மையகரம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் தேர்த் திருவிழா இன்று காலைகோலாகலமாகத் தொடங்கியது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை உற்சாகத்துடன் இழுத்தபோது, உயர் மின்னழுத்தம் கொண்டஒரு மின்சாரக் கம்பியில் அந்தத் தேர் உரசிச் சென்றது.
இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து தேரில் இருந்த ஒன்பது பேர் மின்சாரத்தால் தாக்கப்பட்டுதூக்கி எறியப்பட்டனர்.
இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற ஐந்து பேரும் லேசான காயங்களுடன் மட்டும் தப்பிவிட்டனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]