பெங்களூரில் நாளை தமிழறிஞர்கள் மாநாடு
பெங்களூர்:
பெங்களூரில் நாளையும் நாளை மறுநாளும் தமிழறிஞர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இது குறித்து பெங்களூர் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் சுந்தரராஜன் கூறியதாவது:
தலைநகர் தமிழ்ச் சங்கம், பெங்களூர் தமிழ்ச் சங்கம், தமிழ் ஆட்சி மொழி செவ்வியல் மொழி செயலாக்க மொழிஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து இந்த 2 நாள் மாநாட்டை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடத்த உள்ளன.
4ஆம் தேதி காலை தமிழ் ஆட்சிமொழி மாநாட்டுடன் தொடங்குகிறது. முன்னாள் துணைவேந்தர் அவ்வைநடராஜன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
அன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் மற்றும் பல கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
5ஆம் தேதி தமிழ் செவ்வியல் மாநாடு நடக்கிறது. அன்று மாலை திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்தும் மாநாடு நடக்கும்.
அன்று நடக்கும் நிறைவு விழாவில் தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இம்மாநாட்டில் தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 600 பிரதிநிதிகள்கலந்து கொள்கின்றனர்.
தமிழ்மொழியை செவ்வியல் மொழியாக மாற்றவேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்ஆகியவை உள்ளிட்ட பல கோரிக்கைகள் இந்த மாநாட்டின்போது வலியுறுத்தப்பட உள்ளன என்று கூறினார்சுந்தரராஜன்.












Click it and Unblock the Notifications