எச்சரிக்கை: நாளை முதல் அக்னி நட்சத்திரம்
சென்னை:
தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கிறது. இதையடுத்து வெயிலின் கொடுமை மேலும்அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அடுத்த 15 நாட்களுக்கு கடுமையான வெயில் அடிக்கும். இந்த முறை அக்னி நட்சத்திரத்தின்போது கடந்தஆண்டை விட அதிக அளவில் வெயில் கொடுமை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள்எச்சரித்துள்ளனர்.
எனவே சென்னை, சேலம், மதுரை, நெல்லை போன்ற வெயில் அதிகமாக உள்ள மாவட்டங்களில் இந்த முறைவெயிலின் கடுமை மிகவும் கொடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இப்போதே கடுமையான வெயில் அடித்து வருகிறது. இதில் அக்னி நட்சத்திரம் வேறு வந்து விட்டால்வெளியில் தலை காட்டவே முடியாத நிலை ஏற்படும் என்று சென்னைவாசிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
அக்னி நட்சத்திரம் வந்தாலும் கூட சில தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாககன்னியாகுமரி, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட சில பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழைபெய்துள்ளது. எனவே இந்தப் பகுதி மக்களுக்கு அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் அவ்வளவாக இருக்காது என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தலையில் தொப்பியுடனும், கண்களில் "குளிர் கண்ணாடியுடனும்" அலைந்தால் வெயில் கொடுமையிலிருந்து ஓரளவுதப்பலாம்.












Click it and Unblock the Notifications