For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விவகாரம்: கர்நாடகம் மீது பன்னீர் பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரியில் 187.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டிருப்பதாக கர்நாடக அரசு பொய் சொல்கிறது என்று தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் கூறினார்.

நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்று சமீபத்தில் தமிழக சட்டசபையில்பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

இதற்கு நேற்று பதிலளித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல், காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படிதான்கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது என்றும் ஏப்ரல் 28ம் தேதி நிலவரப்படி 187.5 டி.எம்.சி.தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதை இன்று தமிழக சட்டசபையில் பன்னீர்செல்வம் வன்மையாக மறுத்தார். 187.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டுள்ளதாக பாட்டீல் பொய் கூறுவதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.

இதுவரை 160.67 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளதாகக் கூறியபன்னீர்செல்வம், மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்துள்ள தண்ணீரின் அளவை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன்னும் 45 டி.எம்.சி. தண்ணீர் வர வேண்டியுள்ளதாகவும் பன்னீர்செல்வம் சட்டசபையில் கூறினார்.

காவிரிப் பிரச்சனை தொடர்பாக தனி ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழகஅரசு வலியுறுத்தப் போவதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X