இன்னும் 10 நாட்களில் பிளஸ் டூ முடிவுகள்
சென்னை:
பிளஸ் டூ விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து விட்டதையடுத்து, தேர்வு முடிவுகள் இன்னும் 10நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு மார்ச் மாதம் 4 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவியர் பிளஸ் டூ தேர்வுஎழுதினர். இவர்களது விடைத்தாள்கள் திருத்தும் பணி, 40 மையங்களில் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது.
தற்போது அனைத்து விடைத்தாள்களும் திருத்தி முடிக்கப்பட்டுவிட்டன. மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவுசெய்யும் பணிகள் படு ஜரூராக நடந்து வருகின்றன. மதிப்பெண் பட்டியலும் வெகு விரைவில் தயாராகி விடும்.
எனவே இன்னும் 10 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுத் துறை வட்டாரங்கள்தெரிவித்தறன.
மேலும், சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பிளஸ் டூ மாணவ-மாணவியர் மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற உயர்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதியுள்ளனர். அதற்கான முடிவுகள் 15ஆம் தேதி வெளியாகும் என்றுதெரிகிறது.
இந்த இரண்டு தேர்வு முடிவுகளும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியிடப்படுவதால், மாணவ-மாணவியர்விரைவில் தங்களுடைய கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புக்கள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications