For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் மாவட்டங்களை கலக்கும் கோடை மழை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்பட பல தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்ச்சிக் கடலில்மூழ்கடித்து வருகிறது.

கடும் வெயில் அடிக்கும் இந்தக் கோடை காலத்தில், கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில்நேற்றும் இன்றும் நல்ல மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடுமையான இந்த கோடை மழை காரணமாககடலுக்குள் மீன் பிடிக்க மீனவர்கள் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அணைகள்அனைத்தும் நிரம்பியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தஇந்தக் கோடை மழையினால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளது என்று தஞ்சாவூர் பகுதி மக்கள்மகிழ்ச்சியுடன் கூறினர்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X