மாமல்லபுரம் கடலில் மூழ்கி 3 பேர் சாவு
மாமல்லபுரம்:
சென்னை அருகே மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி 3 பேர் பலியாயினர்.
கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், சுற்றுலா ஸ்தலங்களில் கூட்டம்அலை மோதுகிறது. குறிப்பாக மாமல்லபுரத்திற்கு வருவோரின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாமல்லபுரம் கடலில் அலைகள் வேகமாக வீசும் என்பதாலும், கடல் பகுதி ஆழமானது என்பதாலும்அங்கு படகில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி படகில் சென்று பலியாவோரின்எண்ணிக்கையும் இங்கு அதிகம்.
சமீபத்தில் பாண்டிச்சேரியிலிருந்து இரண்டு பேரும், சென்னையிலிருந்து வந்த ஒருவரும் இதேபோல படகு சவாரிசென்று கடலில் மூழ்கி இறந்தனர். இவர்களில் இருவருடைய உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மற்றொருவரின்உடல் இதுவரை கிடைக்கவில்லை.
மாமல்லபுரம் கடலில் குளிக்கவோ, படகு சவாரி செல்லவோ கூடாது என்று போலீஸார் தடையுத்தரவுபோட்டிருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் அதை பொருட்படுத்துவதே இல்லை. இதன் காரணமாக இங்கு கடலில்மூழ்கி பலியாவோரின் சோகக் கதை தொடர் கதையாகி விட்டது.