மீண்டும் உ.பி. முதல்வரானார் மாயாவதி
லக்னோ:
3வது முறையாக இன்று மாயாவதி உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்றார்.
தனது வாழ்க்கையை பள்ளி ஆசிரியையாக தொடங்கிய மாயாவதி, அரசியலில் நுழைந்து கடந்த 7 வருடங்களில் 3வது முறையாகஉத்திரபிரதேசத்தின் முதல்வர் பதவியை பிடித்துள்ளார். தலித் இன மக்களின் தலைவியாக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர்இவர்.
47 வயது நிரம்பிய மாயாவதி இதற்கு முன் 6 மாத காலம் கூட முதல்வர் பதவியில் நீடித்ததில்லை.
1985 மற்றும் 1987ஆம் ஆண்டுகளில் பிஜ்னோர் மற்றும் ஹரித்வாரில் இரண்டு முறை இடைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். பிறகு,1989ஆம் ஆண்டு பிஜ்னோரில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
தனது அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய மாயாவதி, 1995 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி பா.ஜ.க. ஆதரவுடன் முதல்முதலாக முதல்வர் பொறுப்பை ஏற்றார். ஆனால், சில மாதங்களிலேயே இவரது ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்தது.
மீண்டும் பா.ஜ.க. ஆதரவுடன் பதவிக்கு வந்தார். மீண்டும் கவிழ்ந்தார்.
இப்போது மூன்றாவது முறையாக அவர் மீண்டும் உத்திரபிரதேசத்தின் முதல்வராகி உள்ளார். இப்போதும் அதே பா.ஜ.கவுடன் தான்.முலாயம் சிங் முதல்வராகிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவும இவரிடம் உள்ள 10 எம்.பிக்களைக் கணக்கில் கொண்டும் தான்பா.ஜ.க. இவரை முதல்வராக்கியுள்ளது.
இந்த சோதனை முயற்சி எத்தனை மாதங்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை.