இடைத்தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மூன்று சட்டசபைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்நாளை தொடங்குகிறது.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும்31ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தொகுதிகளில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தினமும் காலை 11 மணி முதல் 3 மணி வரைவேட்புமனுத் தாக்கல் செய்யலாம். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வரும் 13ம் தேதி இறுதி நாளாகும்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். மனுவை லாபஸ் பெற விரும்புபவர்கள்16ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.
அதன் பின்னர் 16ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications