மகாபலிபுரம் அருகே தலைமை செயலகம் மாற்றப்படும்: ஜெ. தகவல்
சென்னை:
மகாபலிபுரம் அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் தமிழக சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவைஅமைக்கப்படவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக் கட்டடம் குறித்து புதன்கிழமை காங்கிரஸ் தலைவர் யசோதா பேசுகையில், தற்போது சட்டசபைக்கட்டடமும் தலைமைச் செயலகமும் ஒரே வளாகத்தில் அமைந்திருப்பதால் பெரும் நெருக்கடி நிலவுகிறது என்றும்எனவே புதிய இடத்திற்கு சட்டசபைக் கட்டடத்தை மாற்றும் எண்ணம் அரசுக்கு உண்டா என்றும் கேட்டார்.
அதற்கு ஜெயலலிதா பதிலளிக்கையில் கூறியதாவது:
தலைமைச் செயலக வளாகத்தின் பெரும்பகுதி ராணுவத்தின் கைவசம் இருப்பதால்தான் இந்த நெருக்கடிஏற்பட்டுள்ளது.
எனவே மகாபலிபுரம் அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நிர்வாக நகரம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்தப் புதிய நிர்வாக நகரில் சட்டசபைக் கட்டடம், தலைமைச் செயலகம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கானகுடியிருப்புகள் ஆகியவை அமையவுள்ளன என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications