For Daily Alerts
Just In
பார்வையற்றோருக்கும் வருமான வரியா? - சென்னையில் உண்ணாவிரதம்
சென்னை:
தாங்கள் வைத்திருக்கும் பொதுத் தொலைபேசி பூத்களும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதியை மாற்றக்கோரி சென்னையில் பார்வையற்றவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
பொதுத் தொலைபேசி வைத்திருப்போர் வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை புதிய உத்தரவுபிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பொதுத் தொலைபேசி நடத்தி வரும்பார்வையற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கையை மேலும் வலியுறுத்தி சென்னை அரசினர் விருந்தினர் இல்லம் முன்பு பொதுத் தொலைபேசிவைத்திருக்கும் பார்வையற்றோர் சார்பில் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உண்ணாவிரதம் இருந்த பார்வையற்றவர்களுக்கு ஆதரவாகப்பேசினார்.
Story first published: Wednesday, May 8, 2002, 5:30 [IST]