பிரபாகரனைக் கைது செய்வதா? - போராட்டத்திற்கு அழைத்த நெடுமாறன் கைது
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்என்ற தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்துப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழர் தேசிய இயக்கத்தின்தலைவரான பழ. நெடுமாறனை இன்று (புதன்கிழமை) அதிகாலை சென்னை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரனை இந்தியாவுக்குப்பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 16ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தேவைப்பட்டால் இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்றும் பிரதமர்வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இதற்கிடையே பிரபாகரனைக் கைது செய்யும் தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறுபோராட்டங்கள் நடத்தப்படும் என்று நெடுமாறன் அறிவித்திருந்தார்.
தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தத் தீர்மானத்தின் நகல்களைஎரிக்கும் போராட்டம் இன்று நடைபெறும் என்றும் நெடுமாறன் கூறியிருந்தார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுமாறன் உள்ளிட்ட 50 தமிழர் தேசிய இயக்கத்தொண்டர்களை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். நெடுமாறனின் வீட்டிற்கே நேரடியாகச் சென்றுபோலீசார் அவரைக் கைது செய்தனர்.
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட போட்டோகிராபர் சுபாசுந்தரத்தையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பல புலிகளின் ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications