போலி டீத்தூள் தொழிற்சாலைக்கு சீல்: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலியில் கள்ளத் தேயிலை தயாரிப்புத் தொழிற்சாலையை போலீஸார் கண்டுபிடித்து சீல் வைத்தனர்.இதுதொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் போலி டீத்தூள்கள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலீஸாருக்குப் புகார் வந்தது.இதையடுத்து திருநெல்வேலி போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது பஸ் நிலையம் அருகே போலி தேயிலை தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வந்தது தெரிய வந்தது.இதையடுத்து அந்தத் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சீல் வைக்கப்பட்ட தொழிற்சாலையிலிருந்து 40 மூட்டை போலி டீத்தூள் மற்றும் 50 மூட்டை போலி டீத்தூள்தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications