ஸ்டிரைக்குக்கு தடையா? - சட்டத்தை வாபஸ் பெற வைகோ வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தடுக்கும் சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றுமதிமுக பொதுச் செயலாளரான வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வேலைநிறுத்தங்களைத் தடை செய்யும் இந்தச் சட்டம் ஏதேச்சாதிகாரமானதும் கொடுமையானதுமாகும்.
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றுவோம் என்று கூறுபவர்கள், இப்படிதொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருவதில்தான் தாங்கள் முதன்மையானவர்கள் என்றுகாட்டியுள்ளனர்.
எந்தவிதமான தயக்கமும் இன்றி தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.
தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து இதை எதிர்த்துப் போர்க் குரல் எழுப்ப வேண்டும் என்று அவ்வறிக்கையில்வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications